×

ரூ.5 லட்சம் காப்பர் கொள்ளை: தொழிற்சாலை ஊழியர் கைது

திருவள்ளூர்: வேலை பார்த்த கம்பெனியில் காப்பர் திருடிய ஊழியர் சிக்கினார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமம் மங்காத்தா குளம் சாலையில் வாகனங்களுக்கு உதிரிபாங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. நேற்று முன்தினம் கம்பெனியை திறக்க வந்தபோது சுமார் 800 கிலோ எடை கொண்ட ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள  காப்பர் பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து கம்பெனியின் மேலாளர் தினேஷ் கொடுத்த புகாரின்படி,

மணவாளநகர் போலீசார் வழக்குபதிவு செய்து கம்பெனியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த கம்பெனியில் பணியாற்றிவரும் மணிக்குமார் (28) என்பவர்தான் காப்பரை கொள்ளையடித்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து மணிக்குமாரை கைது செய்து விசாரித்துவிட்டு திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Rs 5 lakh copper robbery: Factory worker arrested
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக ரூ12 கோடி...